• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

இலங்கை

பொருளாதார நெருக்கடிக்கு தானும் அரசாங்கத்தில் உள்ள பலருமே பொறுப்பு என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.

தீர்ப்பை ஏற்கப் போவதில்லை என்றும், அதற்கான காரணங்களை தாம் வாய்ப்பு கிடைக்கும் போது விளக்கமளிப்பதாகவும் கூறியுள்ளார்.

அடுத்த கட்சி மாநாடு பிரமாண்டமாக நடத்தப்படும் என்றும், அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply