• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டாக்டர் வரதராஜாவின் தமிழினப் படுகொலையின் சொல்லப்படாத உண்மைகள் என்ற ஆங்கில நூலின் வெளியீட்டு விழா 

கனடா

டாக்டர் வரதராஜாவின் தமிழினப் படுகொலையின் சொல்லப்படாத உண்மைகள் என்ற ஆங்கில நூலின் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக 

கடந்த 12 நவம்பர் 2023 ஞாயிற்றுக்கிழமை ஸ்காபரோவில் அரங்கு நிறைந்த மக்களோடு நடைபெற்றது.

டாக்டர் வரதராஜா அவர்கள் 2009ஆம் ஆண்டு மே மாதம் வன்னிப் பெரு நிலப்பரப்பில் நடைபெற்ற கொடிய - இறுதி யுத்தத்தின் போது காயமடைந்த பொதுமக்களதும்  போராளிகளதும் உயர்களைக் காப்பாற்ற இரவு பகலாக போராடிய மூன்று வைத்தியர்களில் ஒருவர். (மற்றவர்கள் டாக்டர் சத்தியமூர்த்தி, டாக்டர் சண்முகராஜா) டாக்டர் வரதராஜா அவர்கள் நெஞ்சினில் காயம் அடைந்தார். அந்த நிலையிலும் இறுதிக் கணம் வரை யுத்த களத்தில் நின்று பணியாற்றிய ஒருவர். இராணுவத்தால் கைது. செய்யப்பட்ட அவர் பல மாதங்கள் தடுப்பு முகாம்களில் கொடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாகி அரச சாட்சியாக உண்மைக்கு மாறாக பேசும்படி கேட்ட போதெல்லாம் துணிச்சலோடு நான் ஒரு மருத்துவர். எனது பணி உயிருக்காகப் போராடுபவர்களைக் காப்பாற்றுவதே தவிர வேறு ஒன்றும் நான் செய்ய மாட்டேன் என்று துணிந்து கூறியதுடன் அதற்காகவே பல்வேறு இன்னல்களை அனுபவித்த ஒருவர். 

யுத்த களத்தில் மருந்து வசதிகளோ சத்திரசிகிச்சை வசதிகளோ இன்றி அந்த அந்த இடங்களில் மக்களது உயிர்களைக் காப்பாற்றப் போராடியவர். அன்று யுத்த களத்தில் இவர்கள் தான் மக்களுக்குக் கடவுளாகத் தெரிந்தார்கள். அப்படிப் பட்ட தெய்வத்திற்குச் சமமான ஒருவரது நூலே அன்று வெளியீடு செய்யப்பட்டது. 

இந்நிகழ்வுவுக்கு கானா நாட்டு இளவரசர் தனது இளவரசியோடு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.  நூலினை வணக்கத்திற்குரிய பேராசிரியர் வணபிதா சந்திரகாந்தன் அவர்கள் ஆய்வுரை நிகழ்த்தினார். கனடா நாட்டின் அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்கள். 

நூலிலின் முதற்பிரதியை தமிழீழத்தின் தேசியப் பாடகர் நாட்டுப்பற்றாளர் வர்ண ராமேஸ்வரனது துணைவியார் திருமதி சபர்மதி வர்ணராமேஸ்வரன் அவர்களுக்கு டாக்டர் வரதராஜா அவர்கள் வழங்கிக் கௌரவித்தார்.

இந்நூல் ஒவ்வோர் தமிழனது இல்லங்களிலும் இருக்க வேண்டிய நூல் மாத்திரமல்ல எமது எதிர்காலச்சந்ததி கட்டாயம் வாசிக்க வேண்டிய அவசிய தேவையுள்ள நூலாகும். இந் நூலினைப் பெற விரும்புபவர்கள் 437 328 5974 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
 

Leave a Reply