• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மஸ்கெலியா, சாமிமலை பிரதேசத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

இலங்கை

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, ஓல்டன் தோட்ட நிலாவத்தை பிரிவில் மனித எச்சங்கள் காணப்பட்டதையடுத்து பொது மக்களால் மஸ்கெலிய பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகைத் தந்திருந்த பொலிஸார், குறித்த விடயம் தொடர்பாக ஹட்டன் நீதிவானுக்கும் அறிவித்துள்ளனர்.

நீதவான் எச்சங்களை நேரில் பார்வையிட்டுள்ள நிலையில், குறித்த மனித எச்சங்கள் DNA பரிசோதனைக்காக கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் அதே தோட்டத்தை சேர்ந்த 70 வயதான ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில், இது அவரின் உடல் பாகமாக இருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதற்கமைய, மஸ்கெலியா பொலிஸார் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply