• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பொருளாதார நெருக்கடிக்கு காரணம் ராஜபக்ஷர்களே என்ற தீர்ப்பு குறித்து நாமல் கருத்து

இலங்கை

தாம் எப்போதும் நீதித்துறையை மதிப்பவர்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஷ சகோதர்கள் உள்ளிட்டோரே பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ள நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் எழுத்துமூலமான சாட்சியங்களை மாத்திரமே பரிசீலித்துள்ளதாகவும், வாக்குமூலங்கள் எதுவும் கோரப்படவில்லை எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் பொருளாதார நெருக்கடி பற்றி நீண்ட நேரம் விவாதிக்க சிறந்த இடம் நாடாளுமன்றம் என்றும் ஆகவே இந்த விடயம் குறித்து தெரிவுக்குழுவை நியமித்து ஆராய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply