• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மன்னாரில் வெள்ளத்தில் மூழ்கிய கிராமம்- வடிகான்களை அமைக்குமாறு மக்கள் கோரிக்கை

இலங்கை

மன்னார் மாவட்டம், முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட குனைஸ் நகர் கிராம மக்கள் மீள்குடியேறி சுமார் 13 வருடங்களாகியும் அவர்களின் அடிப்படை வசதிகள் பல இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருப்பதாக அக்கிராம மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கடற்தொழிலை ஜீவனோபாயமாக கொண்டிருக்கும் இக்கிராம மக்களில் பெரும்பான்மையானோர் அண்மைக்காலமாக பெய்து வரும் கடும் மழை காரணமாக கடற்கரை வீதி முற்றாக வெள்ளத்தில் மூழ்கியதில் தொழிலுக்கு செல்ல முடியாது பாரிய அசௌகரியங்களை சந்தித்துள்ளனர்.

சுமார் 1.45 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கடற்கரை வீதியில் 100 மீட்டர் தூரம் மாத்திரமே செப்பனிடப்பட்டு உள்ளதுடன், எஞ்சிய பகுதி குன்றும் குழியுமாக காணப்படுவதாலும் மழை காலங்களில் முற்றாக இந்த வீதியை பயன்படுத்த முடியாமல் வெள்ள நீர் வழிந்தோட முடியாதவாறு தேங்கி நிற்கின்றது.

பல உள்ளக வீதிகள் இதுவரை அமைக்கப்படாமல் இருப்பதும் உரிய வடிகான் வசதிகள் செய்யப்படாமை காரணமாக பாடசாலை மாணவர்கள் உட்பட இக் கிராம மக்கள் மழை காலங்களில் உள்ளக வீதிகளை பயன்படுத்துவதில் சொல்லனா துயரங்களை அனுபவித்து வருவதோடு அரசியல் ரீதியாக இந்த ஊர் புறக்கணிக்கப் படுவதாகவும் குறித்த கிராம மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவிளக்குகள், உள்ளக வீதிகள், சீரான வடிகான் வசதிகள் உள்ளிட்டவற்றை அமைத்துத் தருமாறு குனைஸ் நகர் கிராம மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
 

Leave a Reply