• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பலாங்கொடை மண்சரிவு - காணாமற்போன நால்வரை மீட்கும் பணிகள் ஆரம்பம்

இலங்கை

பலாங்கொடை கவரங்கேன, வெஹிந்தென்ன, பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காணாமல் போன நிலையில் அவர்களை மீட்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (12) மாலை பெய்த கடும் மழையின் காரணமாக குறித்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் இரண்டு மகள்கள் காணாமற் போயுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அதே வேளை 3 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதி மிகவும் செங்குத்தான பிரதேசம் என்பதால்  அப்பகுதியில்  உள்ள மக்களை வெளியேற்ற பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்  காணாமற்போன நால்வரை மீட்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
 

Leave a Reply