• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக விசேட வேலைத்திட்டங்கள்

இலங்கை

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இலாபம் ஈட்டும் வகையில் பல வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 15 வீதப் பங்கை இலங்கை துறைமுக அதிகாரசபை சொந்தமாக வைத்திருக்கும் போதிலும், இதுவரை எந்த இலாபமும் ஈட்டப்படவில்லை என கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, துறைமுகத்தின் மூலம் வருமானம் பெறும் வகையில் பல வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கவனம் செலுத்தியுள்ளார்.

இதன்படி, அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கொள்கலன் மீள் ஏற்றுமதி திட்டத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

விசேடமாக அம்பாந்தோட்டை மற்றும் கொழும்பு துறைமுகங்களுக்கு இந்தியப் பெருங்கடலில் பயணிக்கும் கப்பல்களை ஈர்க்கும் வெலைத்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்துமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா துறைமுக அதிகாரசபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
 

Leave a Reply