• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொழும்பிலுள்ள முக்கிய வீதிக்குப் பூட்டு

இலங்கை

கொழும்பு, பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்துக்கு அருகில் உள்ள கரையோர வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

குறித்த புகையிரத நிலையத்துக்கு அருகிலுள்ள பயணிகள் மேம்பாலத்தில் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதன் காரணமாகவே குறித்த வீதி மூடப்பட்டுள்ளது.

இதன்படி வெள்ளவத்தையிலிருந்து கொள்ளுப்பிட்டிக்கு கரையோர வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகள், பம்பலப்பிட்டி புகையிரத நிலைய வீதியிலிருந்து காலி வீதி ஊடாக கொள்ளுப்பிட்டிக்கு செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

அத்துடன், கொள்ளுப்பிட்டியில் இருந்து வெள்ளவத்தை நோக்கி பயணிப்பவர்கள் டுப்ளிகேஷன் வீதியூடாக வெள்ளவத்தைக்குச்  செல்ல முடியுமெனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply