• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டயானா கமகே தாக்கப்பட்ட சம்பவம் – பல்வேறு தரப்புகளிடம் வாக்குமூலம்

இலங்கை

அண்மையில் நாடாளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நியமிக்கப்பட்ட குழு இன்று கூடவுள்ளது.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என அக் குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த சம்பவத்தின் போது குழுவின் அருகில் இருந்த இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வாவிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்படு;;ம் என்றும் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சமல் ராஜபக்ஷ, கயந்த கருணாதிலக, இம்தியாஸ் பகீர் மார்க்கர் மற்றும் ரமேஷ் பத்திரன ஆகியோரும் இந்த குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது, 
 

Leave a Reply