• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் சாரணர் நடைபவனி

இலங்கை

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையின் மழலை மற்றும் குருளை சாரணர்களின் சாரணர் நடைபவனி மற்றும் தங்கத் தாரகை வழங்கும் நிகழ்வானது பாடசாலை வளாகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம் பெற்றது.

பாடசாலை அதிபரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர்  சமன் பந்துலசேன, வடக்கு மாகாண கல்வித் திணைக்கள பணிப்பாளர் ஜோன் குயின்டஸ், யாழ். மாவட்ட மேலதிக செயலரும், யாழ் மாவட்ட சாரண ஆணையாளருமான மருதலிங்கம் பிரதீபன்  மற்றும் 350 க்கும் மேற்பட்ட சாரணர்களும் அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
 

Leave a Reply