பிரபல நடிகை திடீர் தற்கொலை
சினிமா
மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன் இன்று காலை தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டது ரசிகர்களிடையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மலையாள நடிகையான இவர், நடிப்பதற்கு முன்பு ரிவி தொகுப்பாளராக இருந்து வந்தார். ஸ்தீரி என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார்.
35 வயதாகும் ரெஞ்சுஷா மேனன் தனது கணவர் மனோஜுடன் வீட்டில் வாழ்ந்து வந்ததாகவும், நிதி நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முதற்கட்ட விசாரணை தற்கொலை என்று கூறினாலும், பொலிசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கொச்சியை பூர்வீகமாக கொண்ட இவர் சினிமாவிலும் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். பல சீரியல்களில் தயாரிப்பாளராகவும், பரதநாட்டிய கலைஞராகவும் வலம் வந்த இவர் இறப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு ஆனந்த ராகம் இணை நடிகை ஸ்ரீதேவி அனிலுடன் கொமடி காட்சி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இக்காட்சியை அவதானித்த ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளதுடன், தங்களது இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.