• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுமார் 70 மில்லியன் ரூபாய் பெறுமதியான அரிசி மூட்டைகள் மாயம்

இலங்கை

குருநாகல் பிரதேசத்தில் உள்ள 2 அரச அரிசி களஞ்சியசாலைகளில் இருந்து சுமார் 70 மில்லியன் ரூபாய் பெறுமதியான அரிசி மூட்டைகள் காணமற் போயுள்ளதாக அரிசி சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” 7,00,000 Kg அரிசி மூட்டைகளே இவ்வாறு காணாமற் போயுள்ளன.  இச் சம்பவம் தொடர்பில் இரண்டு அதிகாரிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். காணாமல் போன அரிசி முட்டைகளின் பெறுமதி சுமார் 65 – 70 மில்லியன் ரூபாய்  என மதிப்பிடப்பட்டுள்ளது”இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply