கவிஞர் வாலி அவர்கள் பிறந்த நாள் சிறப்பு பதிவு.
சினிமா
"தசாவதாரம்"திரைப்படத்தில் இடம்பெற்ற "கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது".. பாடலை இயற்றியவர் கவிஞர் வாலி..
இந்த பாடலில் வாலியின் திறமையை கண்டு வியக்க வைக்கும் சில வரிகள் உள்ளது.
சரணத்தில்...
ராஜலட்சுமி நாயகன் சீனிவாசன்தான்.
சீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன் தான் என எழுதியிருப்பார்.
சீனிவாசன் ராஜலட்சுமி மகனாகிய கமலுக்கு, இங்கே கதை தொடர்பு கெடாத வகையில் ஒரு பஞ்ச் வைத்திருப்பார்...!
அதோடு விட்டாரா...?
சமயம் பார்த்து தனக்கும் சேர்த்து ஒரு பஞ்ச் வைத்துக்கொண்டார்.
நாட்டிலுண்டு ஆயிரம் ராஜராஜன்தான்....ராஜனுக்கு ராஜன் இந்த ரங்க ராஜன்தான்...
வாலியின் இயற்பெயர்
ரங்கராஜன்...!