• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வீட்டு குவளையில் கிடந்த லாட்டரி சீட்டுக்கு ரூ.8.50 கோடி பரிசு

நம்மில் பலர் ஆசையாக வாங்கிய சில பொருட்களை எங்காவது மறந்து வைத்துவிட்டு பின்னர் அதனை தேடி கண்டுபிடிக்க போராடி இருப்போம். அது போன்ற ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அங்குள்ள மாசசூசெட்ஸ் பகுதியை சேர்ந்தவர் கலீல் சவுசா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு லாட்டரி சீட்டு வாங்கினார். அதனை வீட்டில் எங்கோ வைத்துவிட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் தான் அந்த லாட்டரி டிக்கெட்டுக்கு பரிசு அறிவிப்பு நடந்துள்ளது. இதனால் கலீல் சவுசா அந்த டிக்கெட்டை தேடிய போது வீட்டில் உடனடியாக கிடைக்கவில்லை.

அப்போது தான் அந்த வீட்டின் துப்புரவு பணியாளர் வீட்டை சுத்தம் செய்யும் போது குவளையில் அந்த டிக்கெட் கிடப்பதை பார்த்து அவரிடம் எடுத்து கொடுத்தார். இதனால் கலீல் சவுசா இன்ப அதிர்ச்சி அடைந்தார். அவரிடம் இருந்த டிக்கெட்டுக்கு ஒரு மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.8.34 கோடி) பரிசு கிடைத்துள்ளது.

இதில் வரிகள் போக அவருக்கு ரூ.5.50 கோடி கிடைக்கும். இதனால் சந்தோஷத்தில் திளைத்த கலீல் சவுசா லாட்டரியில் கிடைத்த பரிசு தொகையில் ஒரு பகுதியை தேவைப்படும் நண்பர்களுக்கு உதவ விரும்புவதாகவும், தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகள் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
 

Leave a Reply