• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்

இலங்கை

தேசிய நல்லிணக்கத்தினை சிதைக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட விகாராதிபதி அம்பேபிட்டிய சுமன தேரரின் அண்மைக்கால செயற்பாடுகள் தொடர்பாக இன்று கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் யுத்தம் ஆரம்பமாவதற்கும் தற்போது ஏற்பட்டுள்ள இன ரீதியிலான பிரச்சினைக்கும் இவ்வாறான பிரதி நிதிகளே காரணம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோன்று உலகிற்கு சமாதானத்தை போதிக்க வேண்டியவர்களின் இவ்வாறான தரங்கெட்ட செயற்பாடுகள் தொடர்பில் மரியாதைக்குரிய பௌத்த பீடங்கள் அக்கறை செலுத்த வேண்டும்.

இந்த நாட்டில் சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானதாகவே இருக்க வேண்டும். காவி உடை கவசமாக பயன்படுத்தப்படுவதை சட்டத்தை பாதுகாக்க வேண்டிய தரப்புக்கள் அனுமதிக்க கூடாது.

மதகுரு என்று சொல்லப்படுகின்ற குறித்த நபரின் செயற்பாடுகள் மற்றும் பின்னணிகள் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் இருக்கின்றன.

இவை அனைத்தும் விரிவாக ஆராய்ந்து விஷக் கிருமிகள் அனைத்தும் களையப்பட வேண்டும் எனபதே எனது நிலைப்பாடு.
இதுதொடர்பாக, எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளதுடன் அமைச்சரவையிலும் பிரஸ்தாபிப்பதற்கு எதிர்பார்த்துள்ளேன்.

யாதார்த்தினை புரிந்து கொண்டு ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கி பயணிக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன தலைமையிலான அரசாங்கம் விரைவில் இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது ‘ என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்..
 

Leave a Reply