• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வீட்டு வாசலில் காதலியின் அந்தரங்க படங்களை ஒட்டிய காதலன்

இலங்கை

தனது காதலியின் அந்தரங்க புகைப்படங்களை பழிவாங்கும் நோக்கத்தில் காதலியின் வீட்டு வாசலில் ஒட்டிய காதலனை கெஸ்பேவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் மஹரகம பிரதேசத்தில் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் 23 வயதுடைய இளைஞர் ஆவார்.

இவ் இளைஞனின் வீட்டை சோதித்த போது குறித்த பெண்ணின் மேலதிக நான்கு நிர்வாண புகைப்படங்கள் மற்றும் அந்த நிர்வாண புகைப்படங்கள் உள்ள அவரது மடிக்கணினியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் பெண்ணின் பாடசாலை நண்பராக இருந்ததாகவும், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் நெருக்கமான உறவை ஆரம்பித்துள்ளதாகவும் பின்னர் இருவரும் நெருக்கமாக இருந்த நேரங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படம் எடுக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

குறித்த பெண் கடந்த சிறு காலமாக இந்த இளைஞனின் பல்வேறு செயற்பாடுகளை அவதானித்து அவ் இளைஞருடனான உறவை துண்டிக்க முடிவெடுத்த நிலையில் அந்த இளைஞனை தவிர்த்துள்ளார். இதனை அவதானித்த இளைஞன் தன் காதலியை பழிவாங்கும் நோக்கத்தில் இந்த குற்றத்தை செய்துள்ளார்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply