• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் வீடு புகுந்து கொள்ளை - மூவர் கைது

இலங்கை

யாழில் வீடொன்றின் கதவை உடைத்து 7 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களைத் திருடிய குற்றச்சாட்டில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ், உடும்பிராய் பகுதியில் உள்ள வீடொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.  குறித்த வீட்டின் உரிமையாளர் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து வீட்டின் உரிமையாளர் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டினையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் 3 பேரைக்  கைது செய்துள்ளனர்.

அத்துடன் திருடப்பட்ட ஏழு லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களையும் மீட்டுள்ளனர்.  இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Leave a Reply