• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொழும்பு – கதிர்காமம் பகுதியில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் பலர் காயம்

இலங்கை

பேருவளை பகுதியில் நேற்று இடம்பெற்ற பஸ் விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

குறித்த விபத்தானது காலி – கொழும்பு நகரங்களுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் சொகுசு பஸ் ஒன்றும், கொழும்பு – கதிர்காமம் நகரங்களுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றுமே இவ்வாறு மோதுண்டுள்ளன.

இதில் காயமடைந்த 6 பேர், பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு மேலும் சிலர் மேலதிக சிகிச்சைகளுக்காக நாகொடை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது 
 

Leave a Reply