• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பெண் மரணம்

இலங்கை

சம்மாந்துறை, நெய்னாகாடு வம்பியடி பகுதியில் நேற்றிரவு காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கல்முனையில் இருந்து நிந்தவூர் வழியாக இறக்காமம் பகுதிக்கு   மோட்டார் சைக்கிளில் இரவு வேளை பயணம் செய்த 3 பிள்ளைகளின் தாயே  இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில்   மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply