• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாதுகாப்பு அமைச்சின் முக்கிய அறிவிப்பு

இலங்கை

தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் துப்பாக்கி உரிமங்களை புதுப்பித்தல் குறித்த அறிவிப்பை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.

துப்பாக்கி உரிமங்களை எதிர்வரும் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் புதுப்பிக்கலாம் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

தேவையான விவரங்களை பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (www.defence.lk) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதேநேரம் 2024 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கி உரிமம் புதுப்பிக்கும் நடவடிக்கை டிசம்பர் 31 க்குப் பின்னர் மேற்கொள்ளப்படாது என பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

துப்பாக்கி சட்டத்தின் பிரிவு 22 இன் விதிகளின்படி உரிமம் இல்லாமல் துப்பாக்கியை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், 2024/2025 ஆம் ஆண்டிற்கான தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் பதிவை எதிர்வரும் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை புதுப்பிக்க முடியும்.

காலக்கெடுவிற்குப் பிறகு செய்யப்படும் எந்தவொரு புதுப்பித்தல்களும் அபராதம் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
 

Leave a Reply