மொரோக்கோவில் சக்கி வாய்ந்த நிலநடுக்கம் - 296 பேர் உயிரிழந்ததாக தகவல்
மொரோக்கோ நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், 296 பேர் உயிரிழந்ததாகவும், அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவு எனத் தகவல் வெளியாகியுள்ளது. கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியில் வந்து, வீதியில் தங்கினர். சேதம் குறித்து முழுத் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.