• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இந்தியன் டெரெய்ன் புதிய ஷோரூமை நடிகர் அஷ்வின் குமார் திறந்து வைத்தார்

இலங்கை

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஸ்வின் குமார் அதன் பின்னர் 'என்ன சொல்ல போகிறாய்' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து இவர் நடித்த 'செம்பி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

நடிகர் அஸ்வின் குமார் சென்னையில் புதிதாக மறுவடிவமைப்பு செய்யப்பட்ட இந்தியன் டெரெய்ன் ஷோரூமை திறந்து வைத்துள்ளார். பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில் 2000 சதுர அடியில் அமைந்துள்ள இந்த ஷோரூமில் ஆண்களுக்கான நவீன டி–சர்ட், சட்டை, பேண்ட் உள்ளிட்ட ஏராளமான ஆடை ரகங்கள் உள்ளன. இந்த புதிய ஷோரூம் திறப்பு விழாவில் நடிகர் அஷ்வின் குமாருடன் இணைந்து, இந்தியன் டெரெய்ன் நிர்வாக இயக்குனர் சரத் நரசிம்மன், தலைமை வர்த்தக அதிகாரி ஷெஹ்னாஸ் ஷெரீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாரம்பரிய ஷாப்பிங்கிலிருந்து விலகி வாடிக்கையாளர்களுக்கு புதுமையான ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த ஷோரூம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வாடிக்கையாளர்கள் விரும்பும் புதுமையான டிசைன்களில் ஏராளமான பிரத்யேக ஆடைகள் உள்ளன. தாங்கள் விரும்பும் ஆடைகளை வாடிக்கையாளர்கள் எளிமையாக தேர்வு செய்யும் வகையில் இந்த ஷோரூம் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் அஷ்வின் குமார், "பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் இந்தியன் டெரெய்ன் ஸ்டோரை திறந்து வைத்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நீண்ட காலமாக இந்த பிராண்டைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர் என்ற முறையில், இந்த ஆடைகளின் தரம், ஸ்டைல், புதுமை ஆகியவை குறித்து எனக்கு நன்கு தெரியும். மேலும், இங்கு அனைவரும் விரும்பும் வகையில் நவீன காலத்திற்கு ஏற்ற வகையிலான ஏராளமான ஆடைகள் உள்ளன. இங்கு இந்த புதிய ஷோரூமை திறந்துள்ள இந்நிறுவனத்திற்கும் அதன் நிர்வாகத்திற்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

Leave a Reply