• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அனைத்து தேர்தல்களையும் முறையாக நடத்த நடவடிக்கை – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

இலங்கை

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள அனைத்து தேர்தல்களையும் முறையாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் ஊடாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள பிரதான அதிகாரம் தேர்தலை நடத்தும் அதிகாரம் என ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டை மீறியே உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறாமல் போனது என்றும் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
 

Leave a Reply