• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கு மகிழ்ச்சியான செய்தி

இலங்கை

வெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கான விசா முறையை எளிதாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு வருகை விசா, வதிவிட விசா மற்றும் போக்குவரத்து விசா என மூன்று வகையான விசாக்களை வழங்குகிறது.

1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டம் மற்றும் அதன் கீழ் வழங்கப்பட்ட ஒழுங்குமுறைகளுக்கு அமையவே, இந்த செயற்பாடு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

வருகை விசா மற்றும் வதிவிட விசா ஆகிய இரண்டு வகையான விசாக்களின் கீழ் வழங்கப்படும் விசா வகைகளில் தற்போதுள்ள சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, அதிக வெளிநாட்டு ஈர்ப்பு உள்ள நாடுகளில் செயல்படுத்தப்படும் விசா முறைகளை கணக்கில் எடுத்துக்கொள்வதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி இந்த நாட்டில் செயல்படும் விசா முறையை மறுஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   

Leave a Reply