உழைச்சு சம்பாதித்த பணம்தான் நிலைக்கும் - விஷால்
சினிமா
செல்லமே படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் விஷால். அதன்பின்னர் சண்டக்கோழி, திமிரு, சத்யம், அவன் இவன், தாமிரபரணி, துப்பறிவாளன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடித்துள்ள 'மார்க் ஆண்டனி' திரைப்படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதையடுத்து நடிகர் விஷால் இன்று தனது 45-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விஷால் தனது பிறந்த நாளை கோயம்பேடில் ரசிகர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார். அப்போது பேசிய அவர், "என் அம்மா கோயம்பேட்டில் தான் பூ, காய்கறி எல்லாம் வாங்குவார். இங்கு இருக்கும் மக்கள் நன்றாக உழைக்கிறார்கள். உழைச்சு சம்பாதித்த பணம்தான் நிலைக்கும் . 19 வருஷமா என்னை மேடை ஏற்றி அழகு பார்த்த மக்களுக்கு நன்றி. மேல சாமி கீழ பூமி நடுவுல நீங்க தான் என்னை வாழ வைக்கிறீர்கள். போதைப் பொருட்களுக்கு யாரும் அடிமையாகாதீர்கள் " என்று பேசினார்.