• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அஸ்வெசும பயனாளர்களுக்கான கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

இலங்கை

அஸ்வெசும பயனாளர்களுக்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

நலன்புரி நன்மைகள் சபை விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அனைத்து பிரச்சி;னைகளுக்கும் நிவர்த்தி செய்ப்பட்ட பயனாளர்களுக்கான முதலாம் தவனை கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

அத்துடன் நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் பதவி இராஜினாமா செய்ததை தொடர்ந்து கொடுப்பனவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், நலன்புரி நன்மைகள் சபையின் புதிய தலைவராக ஜயந்த விஜேரத்ன பதவியேற்றதன் பின்னர் கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
 

Leave a Reply