• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிளிநொச்சியில் பாம்பு தீண்டி குழந்தையொன்று உயிரிழப்பு

இலங்கை

கிளிநொச்சி, தருமபுரம் பகுதியில் பாம்புக்கடிக்கு இலக்கான ஒன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

கிளிநொச்சி, தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியிலேயே இந்த சம்பவம் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

குறித்த தினத்தன்று நள்ளிரவு ஒரு வயதும் 7 மாதங்களும் நிரம்பிய தனுஜன் ஜெஸ்மின் எனும் குழந்தை படுத்துறங்கிய நிலையில் பாம்பு கடிக்கிலக்காகியுள்ளது.

இதனையடுத்து குறித்த குழந்தை உடனடியாக உறவினர்களால் தருமபுரம் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி வைத்தியசாலையினரால் குழந்தையை கடித்த பாம்பினை கொண்டு வருமாறு கூறியதை அடுத்து உறவினர்கள் அந்த பாம்பினை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

தொடர்ந்து அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு, பொரள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டது.

எனினும், குழந்தை அன்றைய தினமே மூன்று மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply