• Welcome to TamilsGuide
செய்திகள் 1

என்னை கிண்டல் செய்ததால் கல்லால் அடித்தேன் யாழில் பெண் ஒருவரின் செயல்

இலங்கை

யாழ்ப்பாணத்தில் இருந்து அச்சுவேலி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தி பேருந்துக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் பெண் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று (08) கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த, பேருந்தின் சாரதி தன்னை கிண்டல் செய்ததால் தான் கற்களை வீசியதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

பெண்ணின் தாக்குதலால் பேருந்தின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்துள்ளதுடன் பயணி ஒருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட பெண்ணை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த யாழ்ப்பாண பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
 

Leave a Reply