சர்வதேச கால்பந்தில் முதல் ஹிஜாபி
விளையாட்டு
உலகின் முதல் சர்வதேச ஹிஜாபி கால்பந்தாட்ட வீராங்கனையாக மொராக்கோ நாட்டின் நூஹாலியா பென்ஸியா இதயங்களை வென்று வருகிறார்.
நேற்று மொராக்கோ-தென் கொரியா இடையே நடந்த Fifa உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகளில் 1-0 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தியது மொராக்கோ. இதில் சர்வதேச உலகக் கோப்பை போட்டியில் ஹிஜாப் அணிந்து விளையாடிய முதல் கால்பந்தாட்ட போட்டியாளர் என்ற பெருமையை பெற்றார் நூஹாலியா.
2014 ஆம் ஆண்டு முதலே ஹிஜாப் தடையை நீக்கிவிட்ட ஃபிஃபா அமைப்பு, ஜூனியர்களுக்கு மட்டும் விலக்களித்துவிட்டு, ஃபிரான்ஸின் அழுத்தம் காரணமாக மறைமுகமாக சீனியர் பெண் போட்டியாளர்கள் ஹிஜாப் அணிவதை தடுத்துவந்த நிலையில் 2023இல் நூஹாலியா இதனை மீண்டும் வழக்கத்திற்கு கொண்டுவந்தது துணிச்சலாக பார்க்கப்படுகிறது.