• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலேனும் தேர்தலை நடத்துவதற்கு வலியுறுத்துமாறு கோரிக்கை

இலங்கை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேனும் முதலில் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதியிடம் வலியுறுத்துமாறு இந்திய உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இடம்பெற்றது.

இந்த நிலையில் மாகாண சபை முறைமை மற்றும் பெருந்தோட்ட மாணவர்களின் கல்வி அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply