• Welcome to TamilsGuide
செய்திகள் 1

போர் நிறுத்தம் குறித்து புதின், ஜெலன்ஸ்கியுடன் பேசுவேன் - அதிபர் டிரம்ப்

ரஷியா-உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் புதின் சம்மதம் தெரிவித்தார்.

இரு நாட்டு பிரதிநிதிகளும் நேரடி அமைதிப் பேச்சுவார்த்தைக்காக நேற்று முன்தினம் துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் கூடினர். துருக்கி நாட்டின் அதிகாரிகள் நடுநிலை வகித்தனர். இந்தச் சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நடந்தது.

இந்நிலையில், ரஷியா-உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து திங்கட்கிழமை அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசுவேன் என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

வரும் திங்கட்கிழமை ரஷியாவின் அதிபர் விளாடிமிர் புதினிடம் தொலைபேசி மூலம் பேசுவேன். அப்போது வாரத்திற்கு சராசரியாக 5000-க்கும் மேற்பட்ட ரஷிய மற்றும் உக்ரைன் வீரர்களைக் கொல்லும் போரை நிறுத்துவது குறித்து பேசுவேன்.

அதன்பின் நான் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடமும் பேசுவேன். இது ஒரு முக்கிய நாளாக இருக்கும் என நம்புகிறேன். ஒரு போர் நிறுத்தம் ஏற்படும். மேலும் இந்த வன்முறை முடிவுக்கு வரும் என தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply