• Welcome to TamilsGuide
செய்திகள் 1

FBI கண்டுபிடிப்பை நிராகரித்தால் அமெரிக்கா எதிர்வினையாற்றும் – ரணில் எச்சரிக்கை

இலங்கை

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான அமெரிக்க புலனாய்வுப் பிரிவின் (FBI) கண்டுபிடிப்புகளை இலங்கை நிராகரித்தால் வொஷிங்டன் எதிர்மறையாக பதிலளிக்கக்கூடும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.

இசைக்கலைஞர் இராஜ் வீரரத்ன மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல்வாதி மிலிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் ஒரு நேர்காணலின் போது பேசிய ரணில் விக்கிரமசிங்க, தாக்குதல்களுக்குப் பின்னால் சஹ்ரான் ஹாஷிம் தான் மூளையாக செயல்பட்டார் என்று FBI விசாரணையில் முடிவு செய்யப்பட்டதாகக் கூறினார்.

இந்த நிலையில், தாக்குதல் குறித்து இலங்கை வேறுபட்ட கதையை ஊக்குவிக்க முயன்றால், அது அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கோபப்படுத்தக்கூடும் என்றும், அவர் அதிக வரிகளை விதிப்பதன் மூலமோ அல்லது தனது பதவிக் காலத்தில் உக்ரேனின் தலைமையை நடத்தியது போன்ற இராஜதந்திர நடவடிக்கை எடுப்பதன் மூலமோ எதிர்வினையாற்றக்கூடும் என்றும் அவர் கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் ஜனாதிபதி ட்ரம்ப், தன்னுடன் தனிப்பட்ட முறையில் பேசியதாகவும், விசாரணைகளுக்கு உதவ FBI ஐ நியமித்ததையும் ரணில் விக்ரமசிங்க இதன்போது நினைவு கூர்ந்தார்.
 

Leave a Reply