உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி பங்கேற்பு
இலங்கை
சீனாவில் நடைபெறும் உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டிகளில் 400×4 கலப்பு அஞ்சல் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி அருண தர்ஷன, காலிங்க குமாரகே, ஹர்ஷனி பெர்னாண்டோ, லக்ஷிமா மென்டிஸ், நதீஷா ராமநாயக்க மற்றும் சதேவ் ராஜகருணா ஆகியோர் போட்டியிடவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப் போட்டி எதிர்வரும் மே 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் குவாங்சோவில் உள்ள குவாங்டோங் ஒலிம்பிக் மைதானத்தில் நடைபெறும் எனவும் இது உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டிகளின் 7வது கட்டமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.























