• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட சுகாதார தொழிற்சங்கள்

இலங்கை

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் எதிர்வரும் 28 ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ சீருடை கொடுப்பனவிற்கு இணையாக ஏனையவற்றுக்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவை அதிகரிப்பது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்படவில்லை எனவும் விசேட கொடுப்பனவை அதிகரிப்பதற்கான சுற்றறிக்கை, 15 பிரிவினரை உள்ளடக்கி வெளியிடப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியே இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் சானக்க தர்மவிக்ரம, எதிர்வரும் 28 ஆம் திகதி நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தாதியர்கள் உள்ளிட்ட சுகாதார துறையின் 72 தொழிற்சங்கங்கள் கடந்த நாட்களில் மாகாண மட்டத்தில் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்திருந்தன.

பொருளாதார நீதியை வழங்குவதற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு சுகாதார அமைச்சு தீர்வை வழங்குவதாகக் கூறியபோதிலும், அதனை நிறைவேற்றாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply