• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எதிர்வரும் ஒகஸ்ட் மாத்தில் எந்நேரத்திலும் ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியும் – ரோஹன ஹெட்டியாராச்சி

இலங்கை

ஜுன் மாதம் 17 ஆம் திகதிக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலும், ஜனாதிபதி தேர்தலும் இவ் வருடம் நடுப்பகுதியில் நிச்சயமாக நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் நெருக்கடி காரணமாக மகாணசபைத் தேர்தல் காணாமல் போயுள்ளமை என்பது தெளிவாக தெரிகிறது என குறிப்பிட்ட அவர், ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் காலந்தாழ்த்த முடியாது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

மேலும், ஜுன் மாதம் 17 ஆம் திகதிக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கே உள்ளது. வேறு யாருக்கும் அந்த அதிகாரம் இல்லை என அவர் குறிப்பிட்டார்.

எனினும், நாடாளுமன்றம் தேர்தல் குறித்தான முழுமையான அதிகாரம் தற்போது ஜனாதிபதியிடம் உள்ளது.

அதன்படி, எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்திற்குள் எந்த நேரத்திலும் நாடாளுமன்ற தேர்தலை நடத்த முடியும் என ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply