• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஆச்சி மனோரமாவின் உழைப்பைப் பற்றி நடிகை லட்சுமி கூறுகையில்

சினிமா

ஆச்சி மனோரமாவின் உழைப்பைப் பற்றி நடிகை லட்சுமி கூறுகையில், ஒருமுறை வெளியூர் ஷுட்டிங்குக்காக ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார்களாம். அப்போது ரயிலில் அனைவரும் ஒரே கோச்சில் பயணிக்க ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு 1.30 மணி தாண்டியது. அந்த நேரத்தில் ஏதோ ஒரு பாட்டுச் சத்தம் கேட்டிருக்கிறது. நடிகை லட்சுமி கண்விழித்துப் பார்க்கும்போது மனோரமா ஏதோ பாட்டை மனப்பாடம் செய்து கொண்டிருந்தாராம்.

என்னவென்று விசாரிக்க மறுநாள் ஷுட்டிங்கில் அவர் சம்பந்தப்பட்ட காட்சியில் வசனத்திற்கு இடையே ஏதோ பாடல் ஒன்றைப் பாட வேண்டுமாம் அதற்காக அதனை படித்து மனப்பாடம் செய்து கொண்டிருந்தாராம் மனோரமா. அந்த அளவிற்கு இவரின் உழைப்பு இருக்குமாம்.

மேலும் திரைப்படங்களில் நடிக்கும் போது எந்த உடையலங்காரத்தில் இருக்கிறாரோ அதே அலங்காரத்தில்தான் வீட்டுக்குச் செல்வாராம். சாதாரணமாக ஷுட்டிங் முடிந்தவுடன் பேக்கப் சொல்லிவிட்டு மேக்கப்பை கலைத்துவிடும் நடிகர், நடிகையருக்கு மத்தியில் அதே அலங்காரத்துடன் வலம்வரும் மனோரமாவுக்கு பிடித்த விஷயங்களில் ஒன்றும் கூட.

தனது வாழ்க்கையின் இறுதிக் காலங்களில் உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்த போது மெல்ல சரியாகி வந்திருக்கிறார். அப்போது இயக்குநர் ஹரி தனது படத்தில் ஒருகாட்சியில் மனோரமாவை நடிக்க அழைக்க, அந்த நிலையிலும் இரண்டு நாட்கள் ஷுட்டிங்கில் கலந்து கொண்டு நடித்துக் கொடுத்திருக்கிறார் ஆச்சி மனோரமா. இவ்வாறு தனது வாழ்க்கையை சினிமாவிற்காகவே அர்ப்பணித்து தனதுஇறுதி மூச்சு வரை நடித்துக் கொண்டிருந்தவர்தான் ஆச்சி மனோரமா
 

Leave a Reply