• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆர்ப்பாட்டத்துக்கு தடை உத்தரவு

இலங்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் நாவல திறந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் இணைந்து இன்று நடத்தப்படவிருந்த கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி வீதி நாடகங்களை நடத்தவுள்ளதாக மிரிஹான தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நுகேகொட நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளது

அதன்படி அனுலா வித்யாலா, புனித ஜோசப் பெண்கள் கல்லூரி, சமுத்திரா தேவி பெண்கள் கல்லூரி, புனித ஜான்ஸ் ஆண்கள் கல்லூரி, சுஜாதா பெண்கள் கல்லூரி ஆகியவை பரீட்சை மையங்களாகவும், நீதவான் நீதிமன்றத்தினால் பிரதான வீதிக்கு அருகில் அனுலா வித்தியாலயம் பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையமாகவும் இயங்கி வருகின்றது. .

இன்னிலையில் உண்மைகளை கருத்தில் கொண்டு இந்த போராட்டத்திற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply