• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அம்பாறையில் டென்னிஸ் விளையாட்டரங்கு திறப்பு

இலங்கை

அம்பாறை மாவட்டத்தில் பொலிஸ் திணைக்களத்தின் உதவியுடன் டென்னிஸ் சங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள டென்னிஸ் விளையாட்டரங்கினை கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் இன்று திறந்துவைத்தார்.

குறித்த நிகழ்வில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் தமெந்த விஜயசிறி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

அம்பாறை மாணவர்கள் டென்னிஸ் விளையாட்டில் தமது திறமைகளை வளர்த்துக் கொள்ள இது ஒரு சந்தர்ப்பமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply