• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிங்கிரிய அபிவிருத்திப் பணிகளை நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி பணிப்பு!

இலங்கை

பிங்கிரிய தொழில் வலயத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகளை இந்த வருட இறுதிக்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பிங்கிரிய தொழில் வலயத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட ஏனைய கட்டுமானங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு பணிப்புரை விடுத்தார்.

மூன்று கட்டங்களில் கீழ் பிங்கிரிய தொழில் வலயத்தின் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில்,

முதல்கட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகின்ற உட்கட்டமைப்பு வசதிகள் குறிப்பிடத்தக்க அளவில் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பணிகளை இந்த வருட இறுதிக்குள் நிறைவு செய்யுமாறு பணிப்புரை விடுத்துள்ள ஜனாதிபதி, எதிர்வரும் ஜூன் மாதம் அந்த பணிகளை மேற்பார்வைச் செய்ய எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.
 

Leave a Reply