• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

இலங்கை

சுமார் இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிமான பெறுமதி கொண்ட குஷ் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந் நிலையில், அவரது பயணப்பையில் சூட்சுமமாக பொதி செய்யப்பட்டிருந்த 5 கிலோ 278 கிராம் குஷ் போதைப்பொருளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கைதான சந்தேக நபர் ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடையவர் என்பதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply