• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புரட்சிகர அரசியலை முன்னெடுக்க தயாராகின்றேன் -எஸ்.சிறிதரன்

இலங்கை

விட்டுக்கொடுப்புக்களுடனான புரட்சிகர அரசியலை முன்னெடுக்க இன்று தயாராகிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற தமிழ்த் தேசிய மே தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” பொது வேட்பாளர் தொடர்பில் பல விடயம் பேசப்பட்டு வருகின்றது. 2005ம் ஆண்டு ஜனதிபதி தேர்தலை பகிஸ்கரித்தோம். தேசியத் தலைவரும், அவர் மீது இருந்த நம்பிக்கையில் நாம் பகிஸ்கரித்தோம். 2009 எங்களை தாக்கியவரையே ஆதரித்து எமது கட்சி செயற்பட்டது. ஆனாலும் அவர் தோல்வியடைந்தார்.

பின்னர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து ஜனாதியாக்க மக்கள் வாக்களித்தனர். பின்னர் அவர்  ராஜபக்சவை ஆதரித்து அழகு பார்த்தார். கடந்த தேர்தவில் நிலை மாற்றமடைந்தது. ஜனாதிபதியாவதற்கு நாடாளுமன்றில் டலசுக்கு ஆதவெளித்தோம். எனினும் அவர் தோற்றார்.

இந்த நிலையில் புதிய ஜனாதிபதி தேர்தல் வருகிறது. இந்த நிலையில் ரணிலுக்கா? சஜித்துக்கா? அனுரவுக்கா ஆதரவளிப்பது என பலரும் பேசுகின்றனர். ஈழத் தமிழருக்கு இவர்கள் தரப்போவது என்ன?

என்னைப் பொறுத்த வரையில் இதுவரை ஜனாதிபதி தேர்தலில் ஆதரித்த அனைவரும் ஏமாற்றி உள்ளனர். ரணில் கருணாவை பிரித்தது முதல் பல்வேறு துரோகத்தன செயற்பாடுகளை செய்தவர். சஜித் ஆளுமையற்றவர்.

அனுரகுமார தலைமையிலான கட்சி வடக்கு கிழக்கை பிரித்து. இளைஞர்களை திரட்டி இராணுவத்தில் இணைத்து போராட்டத்தை அழித்ததுடன், யுத்த வெற்றியை கொண்டாடினார்கள்.

இவர்களுக்கு ஆதரவளிப்பதன் வெகுமானம் என்ன? நாங்கள் பொதுசன வாக்கெடுப்பு நடந்த வேண்டும். நாங்கள் கேட்டால் சிங்கள மக்கள் கிளர்ந்து எதிர்ப்பார்கள். இலங்கையில் சிங்கள பெளத்தனே ஜாதிபதியாகலாம் என்பது தெரியும். தெரிந்தும் பொது வாக்கெடுப்புக்கு ஏற்ப இந்த தமிழ் பொது வேட்பாளர் பொருத்தமாகும்”இவ்வாறு ஸ்ரீ தரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply