• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இந்திய உயர்ஸ்தானிகர் ஒலுவில் துறைமுகத்திற்கு விஜயம்

இலங்கை

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் விசேட அழைப்பின் பேரில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேற்று (01) ஒலுவில் துறைமுகத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

குறித்த விஜயத்தின் பின்னர் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் எம்.ஏ.சீ.ரியாஸ் அவர்களின் தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்விலும் இந்திய உயர்ஸ்தானிகர் கலந்துகொண்டிருந்தார்.

இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.மன்சூர், முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஜே.பீ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply