• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஈஸ்டர் தாக்குதல் - மனித உரிமைப் பேரவையை நாடவுள்ள பேராயர் மெல்கம் ரஞ்சித்

இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணையை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி, கத்தோலிக்க திருச்சபை ஐ.நா. மனித உரிமை பேரவையை நாடவுள்ளதாக கொழும்பு, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று 5 வருடங்கள் கடந்துள்ள போதிலும் தாக்குதல்களின் பின்னணியிலுள்ள சதி மற்றும் அதற்கு மூளையாக செயற்பட்டவர்கைளை கண்டறிய, இலங்கை அரசாங்கங்கள் தொடர்ச்சியாக தவறி வருகின்றன.

இந்தநிலையில், இந்த தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டும் வகையிலேயே ஐ.நா.வை நாடவுள்ளதாக கொழும்பு, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், இந்தத் தாக்குதல் தொடர்பாக ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணையை முன்னெடுக்குமாறு ஐ.நா.வில் கத்தோலிக்க திருச்சபை வலியுறுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply