• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஸ்ரீபாத உடமலுவில் இருந்து குதித்து இளைஞனை தேடும் நடவடிக்கைகள்- நிறுத்தம்

இலங்கை

ஸ்ரீபாத உடமலுவில் இருந்து கீழே குதித்து காணாமல் போன இளைஞனை தேடும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதாக லக்ஷபான இராணுவ தளத்தின் கட்டளை அதிகாரி தெரிவித்துள்ளார்

கடந்த 19ஆம் திகதி ஹம்பாந்தோட்டை சூரியவெவ பிரதேசத்தில் இருந்து இரண்டு யுவதிகளுடன் ஸ்ரீபாதா தரிசனம் செய்ய வந்த நபர், ஸ்ரீ பாத உட மலுவையிலிருந்து இரத்தினபுரி வீதியில் ஓடி பாதுகாப்பு வேலியில் இருந்து கீழே குதித்துள்ளார்.

இதன்படி, லக்ஷபான இராணுவ முகாமில் இருந்து 15 பேர் கொண்ட குழுவினர் மற்றும் நல்லதண்ணி பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழுவினர் காணாமல் போன இளைஞரை தேடுவதற்காக இளைஞர் கீழே குதித்த இடத்தில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஆனால் நேற்று வரை காணாமல் போன இளைஞன் தொடர்பில் எந்தத் தகவலும் கிடைக்காததால், ஸ்ரீ பாதஸ்தானபித்த தேரரின் அறிவுறுத்தலுக்கு அமைய நடவடிக்கை நிறுத்தப்பட்டதாக கட்டளை அதிகாரி கூறுகிறார்.

மேலும் ஸ்ரீ பாத உடமலுவையில் இருந்து கீழே குதித்த இளைஞன் காப்புக்காடு வழியாக இறங்கி ஓடியிருக்கலாம் என சந்தேகிக்கும் பாதுகாப்பு அதிகாரிகள், ஸ்ரீ பாத உடமலுவையில் இருந்து கீழே குதிக்கும் முன் குறித்த இளைஞன் ஸ்ரீ பாத உடுமலுடையில் சுயநினைவின்றி இருந்ததாக தகவல் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply