• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட அலுவலகத் திறப்பு விழா

இலங்கை

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியிள்  (ஈ.பி.டி.பி) மன்னார் மாவட்ட அலுவலகம் நேற்று (20) காலை வைபவ ரீதியாகத்  திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் – தாழ்வுபாடு பிரதான வீதியில் அமைக்கப்பட்ட குறித்த அலுவலகத்தை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் ஆகியோர் இணைந்து  திறந்து வைத்துள்ளனர்.

நீண்ட காலமாக மன்னார் மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கிளை அலுவலகம் இயங்காத நிலையில் நேற்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் வைத்தியர் கதிர்காமநாதன்,ஈ.பி.டீ.பி கட்சியின் மாவட்ட இணைப்பாளர்கள்,இளைஞர் அணி தலைவர்,செயலாளர் பிரதேச இணைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 

Leave a Reply