• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட அறிவிப்பு

இலங்கை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையானது  ஐரோப்பிய நாடுகளுக்கான விமானப் பாதைகளை மாற்றுவதாக  அறிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் மோதல் நிலை காரணமாக  பாதுகாப்புக் கருதி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஐரோப்பாவுக்கான விமான சேவை நேரம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும்,இதனால் விமானத்திற்கு கூடுதல் எரிபொருள் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விமானம் சுமந்து செல்லும் எடையைக்  குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை லண்டன் செல்லும் விமானங்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக புறப்படும் எனவும் இதனால் லண்டன் செல்லும் பயணிகள் முன்கூட்டியே விமான நிலையத்தை வந்தடையுமாறு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம்  தெரிவித்துள்ளது.

மேலும் நேர மாற்றத்தினால் அசௌகரியங்களுக்கு உள்ளாகும் பயணிகளுக்கு மாற்று விமானங்கள் மற்றும் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி தருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply