• Welcome to TamilsGuide
செய்திகள் 1

என் முன்னழகு பெருசாக இருக்க காரணம் இது தான் - ரேஷ்மா பசுபுலேட்டி

சினிமா

கவர்ச்சிக்கு பெயர் போன நடிகைகளில் ஒருவரான ரேஷ்மா தனது கணவரைப் பிரிந்து சென்னையில் வந்து தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் சீரியல் திரைப்படம் உள்ளிட்ட தமிழ் தொலைக்காட்சி தமிழ் திரைப்படங்களில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். முதலில் மாடல் அழகாக தனது கெரியரை தொடங்கியவர் தனது அப்பாவின் தயாரிப்பில் வெளிவந்த வேலைன்னு வெள்ளைக்காரன் திரைப்படத்தில் ஒரு கவர்ச்சியான காமெடி நடிகை ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
  
இந்த படம் அவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க பிக் பாஸ் தமிழ் சீசன் 3ல் கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

இதனிடையே பல்வேறு சூப்பர் ஹிட் சீரியல்களில் இவர் நடித்திருக்கிறார். வாணி ராணி, மரகத வீணை உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் இவர் நடித்திருக்கிறார்.

கூடவே திரைப்படங்களிலும் அவ்வப்போது நடித்து வருகிறார். இதனிடையே பட வாய்ப்புக்காக படு கவர்ச்சியான உடைகளை அணிந்து எடுத்துக் கொள்ளும் கிராமரான புகைப்படங்களை தன் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

அது மட்டும் இல்லாமல் அவரது முகம் மற்றும் பாடி ஷேமிங் குறித்து பல்வேறு பிரச்சனைகளை தொடர்ந்து எதிர்க் கொண்டு வருகிறார் நடிகர் ரேஷ்மா.

இந்நிலையில் நடிகை ரேஷ்மா…. நடிகைகள் எதிர்கொள்ளும் பிளாஸ்டிக் சர்ஜரி பிரச்சனைகள் குறித்து தனது கருத்தை வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

அதாவது நான் முகத்திற்கு பிளாஸ்டிக் செய்திருக்கிறேன் மற்றும் என்னுடைய உதட்டுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறேன். இதெல்லாம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

என்னுடைய முகத்தை பார்க்கும்போது எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு. ஆனால் அதை மற்றவர்கள் விமர்சிக்கிறார்கள்.

அதுக்கு நான் ஒண்ணுமே பண்ண முடியாது .நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய அவங்க ஒன்னும் காசு கொடுக்கல இது என்னோட காசு இது என்னோட உடம்பு எனக்கு பிடிச்சிருக்கு அதனால நான் பண்றேன் என்ன பதில் கூறினார்.

உடனே ஆங்கர் நீங்கள் முகம், உதட்டில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருப்பதை விமர்சிப்பவர்களையும் தாண்டி உங்களது மார்பகங்களை சர்ஜரி செய்தீர்களா என கேட்டு கேட்பவர்களுக்கு உங்களின் பதில் என்ன என கேட்டதற்கு?

நான் பிக் பாஸ் சென்றிருந்தபோது அங்கு சரியாக என்னால் சாப்பிட முடியலை அங்கு உணவுகள் பற்றாக்குறையாக இருந்ததால்,

என்னுடைய உடல் அப்படியே ஒல்லியாக மாறிவிட்டது எனவே அது தான் அதற்கு காரணம் என ரேஷ்மா செம கூலாக பதில் அளித்து இருக்கிறார். 
 

Leave a Reply