• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூலமொன்றைத் தயாரிக்கத் தீர்மானம்

இலங்கை

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று யாழில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விருந்தினர் விடுதி மண்டபத்திலேயே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் சுதாகரனின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், புதிய சட்டமூலம் தொடர்பாக கடற்றொழில் திணைக்கப் பணிப்பாளர் நாயகத்துடன் இணைந்து கடற்றொழில் அமைச்சின் சிரேஸ்ட ஆலோசகர் தவராசா வளவாளராக கலந்து கொண்டு இது தொடர்பான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கியிருந்தார்.

குறித்த கலந்துரையாடலில் அமைச்சின் துறை சார் உத்தியோகத்தர்கள், அமைச்சின் சட்ட ஆலோசகர் மற்றும் துறைசார் வல்லுநர்கள், சமாச உறுப்பினர்கள், யாழ். மாவட்ட கடற்றொழில் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

இதன்போது மீன்பிடி நடவடிக்கை உரிமம் வழங்கலில் உள்ள பொதுவான கோட்பாடுகள், மீன்பிடி உரிமத்தின் கால எல்லை, மீன்பிடி நடவடிக்கை உரிமங்களின் கைமாற்றம், வெளிநாட்டு கலன்கள் மூலம் இலங்கை நிலப்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுதலை தடை செய்தல் அல்லது கட்டுப்படுத்தல், இலங்கை நிலப்பரப்புகளில் மீன்பிடி செயற்பாடுகளை நடத்துவதற்கான மீன்பிடி உரிமத்தை புதுப்பித்தல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டிருந்தது.
 

Leave a Reply