• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுயதொழில் செய்பவர்களுக்கு ஓய்வூதியம்-புதிய அறிவிப்பு

இலங்கை

சுயதொழில் செய்பவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டம் ஏற்கனவே நிதியமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சுயதொழில் செய்பவர்களுக்கு ஓய்வூதியம் தயாரிக்கப்படும் என்றும், குறுகிய கால பயிற்சி மற்றும் பரீட்சையுடன் சான்றிதழ்கள் இல்லாத தொழில் வல்லுநர்களுக்கு தனது அமைச்சின் கீழ் சான்றிதழ் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதன்படி 12 இலட்சம் பேருக்கு அதிகாரமளிக்க தமது அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply