• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புத்தாண்டு காலம் - மரக்கறி மற்றும் இறைச்சிகளின் விலை அதிகரிப்பு

இலங்கை

கொழும்பு – நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலைகள் இன்று அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, ஒரு கிலோ கரட் 450 ரூபாவுக்கும், ஒரு கிலோ வெண்டைக்காய் 350 ரூபாவுக்கும், ஒரு கிலோ போஞ்சி 430 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு கிலோ வெங்காயத் தாள் 500 ரூபாவிற்கும், ஒரு கிலோ தக்காளி 300 ரூபாவிற்கும், ஒரு கிலோ கத்தரிக்காய் 400 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு – நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் கோழி இறைச்சியின் விலையும் இன்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஒரு கிலோ கோழி இறைச்சி 1,400 ரூபாவிற்கும், தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சி 1,300 ரூபாவிற்கும், ஒரு கிலோ கறிக் கோழி 1000 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply